கண்டி இராச்சியம்
————————————-
⚙️1505 – போர்த்துக்கேயர் ( கரையோரம் )
⚙️1658 – ஒல்லாந்தர் ( கரையோரம் )
⚙️1796 – ஆங்கிலேயர் ( கரையோரம் )
⚙️1815 – ஆங்கிலேயர் ( முழு இலங்கை )
_____________________________________
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகையில் இலங்கையிலிருந்த இராசதானிகள்
⚙️கோட்டை : 8ம் வீர பராக்கிரமபாகு
⚙️கண்டி : சேனா சம்பத விக்ரமபாகு
⚙️யாழ்ப்பாணம் : பரராச சேகரம்
⚙️வன்னி : வன்னியர்
_____________________________________
கண்டி இராச்சியத்தின் பாதுகாப்பு அரண்கள்
⚙️மகாவலி கங்கை
⚙️பலனை,உன்னஸ் கிரிய போன்ற கஷ்டமான பாதைகள்
⚙️பள்ளத்தாக்குகள்
⚙️வனங்கள்
_____________________________________
கண்டியை தனி இராச்சியமாக உருவாக்கிய மன்னன்
⚙️சேனா சம்பத விக்ரமபாகு
_____________________________________
சேனா சம்பத விக்ரமபாகுவை அடுத்து அரசனான அவனின் மகன்
⚙️ஜயவீர பண்டார
————————————-
Join Our Educational Group
6ம் விஜயபாகுவின் மகன் மார்கள்
⚙️7ம் புவனேகபாகு
⚙️ரைகம
⚙️மாயாதுன்ன
————————————-
மாயாதுன்ன , ரைகம பண்டார , 7ம் புவனேகபாகு இம்மூவரும் சேர்ந்து தனது தந்தையான 6ம் விஜயபாகுவை கொன்றுவிட்டு கோட்டை இராச்சியத்தை 3 பிரிவாக பிரித்து ஆட்சி செய்தனர்.
⚙️சீதாவக்க : மாயாதுன்ன பிறகு (1ம் இராஜசிங்கன்) இருவரும் வீரமானவர்கள்
⚙️ரைகம : ரைகம பண்டார
⚙️கோட்டை : 7ம் புவனேகபாகு பிறகு (தர்மபாலன்)
————————————-
சேனா சம்பத விக்ரமபாகு வின் மகனான ஜயவீர பண்டார
6ம் விஜயபாகுவை கொலை செய்ய தனது நண்பனான மாயாதுன்னவிற்கு உதவி புரிந்தார்
————————————-
ஜயவீர பண்டார மரணித்த பிறகு அவனது மகனான கரலியத்த பண்டார கண்டி இராச்சியத்திற்கு அரசனானான்
————————————-
கரலியத்த பண்டார போர்த்துக்கேயருடன் உடன்பாடான கொள்கையை கடைபிடித்தான்
————————————-
இதனை எதிர்த்த கண்டி பிரதானிகள் சீதாவக்கை மன்னன் 1ம் இராஜசிங்க மன்னனுக்கு தமது ஆதரவை வழங்கினர்
————————————-
கண்டி இராச்சிய பிரதானி வீரசுந்தர பண்டார 1ம் இராஜசிங்க மன்னனுக்கு கண்டி இராச்சியத்தை ஆக்கிரமிக்க உதவி புரிந்தார்
————————————-
இவ்வாக்கிரமிப்பிற்கு முகம் கொடுக்க இயலாமையால் கரலியத்த பண்டாரவின் மகளான குசுமாசன தேவியும் கரலியத்த பண்டாரவின் மருமகன் யமசிங்க பண்டாரவும் போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்தனர்.
————————————-
குசுமாசன தேவி : டோனா கத்தரினா
யமசிங்க பண்டார : டொன் பிலிப்
எனும் பெயரில் கிறிஸ்தவ சமயத்தை தழுவிக் கொண்டனர்
————————————-
வீரசுந்தர பண்டாரனின் நடத்தையில் சந்தேகமுற்ற 1ம் இராஜசிங்கன் அவனை கொலை செய்தான்
————————————-
வீரசுந்தர பண்டாரவின் மகன் கோணப்பு பண்டாரவும் போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்து டொன் ஜுவான் எனும் பெயரில் கிறிஸ்தவனானான்
————————————-
போர்த்துக்கேயரின் உதவியுடன் கோணப்பு பண்டார அடங்கிய குழுவொன்றுடன் யமசிங்க பண்டார கண்டி இராச்சியத்திற்கு சென்று கண்டியை கைப்பற்றினான்
————————————-
யமசிங்க பண்டார மரணித்த பிறகு இளம் புதல்வனை மன்னனாக்க முயற்சித்த போர்த்துக்கேயர்களை எதிர்த்து மலை நாட்டவரின் ஆதரவை பெற்று 1ம் விமலதர்ம சூரியன் எனும் பெயரில் மன்னனானான்.
————————————-
முதலாம் விமலதர்மசூரியன் எதிர்கொண்ட சவால்கள்
⚙️சட்டபூர்வ ஆட்சி உரிமை இல்லாமை
⚙️கண்டி இராசதானியை போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாக்கவேண்டி இருந்தமை
⚙️சீதாவக்கை ஆதிக்கத்திலிருந்து கண்டி இராசதானியை காப்பாற்ற வேண்டியிருந்தமை
⚙️பௌத்த சமய வீழ்ச்சி
⚙️பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியிருந்தமை
————————————-
ஆட்சியின் சட்டபூர்வ தன்மையை நிலைநாட்டிக்கொள்வதற்காக விமலதர்ம சூரிய மேற்கொண்ட நடவடிக்கைகள்
⚙️குசுமாசன தேவியை திருமணம் செய்வதன் மூலம் ஆட்சி உரிமை நிலைநாட்டிக்கொண்டமை
⚙️விமலதர்ம சூரிய எனும் பெயரில் பௌத்த சமயத்தை தழுவிக்கொண்டான்
⚙️புனித தந்தத்தை கண்டியில் பிரதிஷ்டை செய்தமை
⚙️விகாரைகளை புணர் நிர்மானம் செய்தான்
⚙️உபசம்பதா நிகழ்வை நடத்தினான்
இது போன்று தொடர்ச்சியாக Notes பெற்றுக்கொள்ள எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.
கட்டாயம் எமது குழுக்களில் இணைந்து இருங்கள்.
Join Our Educational Group
0 கருத்துகள்