எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – வரிசையில் நிற்க வேண்டாம் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – வரிசையில் நிற்க வேண்டாம் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

நவம்பர் – 16, செவ்வாய் – 2021

♦️ நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, தேவையில்லாமல் வரிசைகளில் நிற்க வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்

♦️ ‘சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் பெற்றோல் மற்றும் டீசல் தேவையில் 15 வீதத்தையும் டீசல் தேவையில் 30 வீதத்தையும் பூர்த்தி செய்துள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் நாட்டில் போதிய எரிபொருள் கிடைக்காது என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும்

♦️ நாட்டிற்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை தடையின்றி வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்