PCR மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்வது இடை நிறுத்தப்பட்டது.

 

 

▪️சுகாதாரத்துறை தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின்

சுகாதார சேவையாளர்கள் இன்று (23) காலை முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

 

▪️அதற்கமைய, இன்று முதல் கொவிட் தொற்றாளர்களுக்கு PCR மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

▪️வேதனம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

 

▪️தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்