ஆசிரியர்களுக்கான விசேட அறிவிப்பு!






2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோருக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தினூடாக மாத்திரம் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 07 ஆம் திகதி முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்தார்.

 பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியுமெனவும் அவர் கூறினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்