பாடசாலையில் கற்பித்தல் பணியில் ஈடுபட வேண்டிய பாடவேளைகளின் எண்ணிக்கை

  • ➡️உதவி அதிபர்கள் 40 நிமிடம் கொண்ட 12 பாடவேளைகள் கற்பித்தலில் ஈடுபடவேண்டும் .

➡️பிரதி அதிபர்கள் 40 நிமிடம் கொண்ட 10 பாடவேளைகள் கற்பித்தலில் ஈடுபடவேண்டும் .

🔵ICT ஆசிரியர்கள் கணிணி ஆய்வுகூட வசதியில்லாத ஆசிரியர்களை 15 பாடவேளைகள் விடுவித்து கணிணி மூலம் நிறைவேற்றக்கூடிய பணிகளில் ஈடுபடுத்தலாம் .

🔵ஆலோசனைப் பணிக்கான ஆசிரியர்கள் 300 மாணவர்களுக்கு மேற்படின் முழுமையாக ஆலோசனைப் பணியில் ஈடுபடுத்த முடியும்

➡️300 மாணவர்களுக்குக் குறைவாயின் 15 பாடவேளைகள் விடுவித்து செயற்படுத்தலாம் .

➡️சமயப்பாட ஆசிரியர்கள் வாரத்திற்கு 30 பாடவேளைக்குக் குறைவாக இருப்பின் ஆசிரியர்களின் இயலுமைக்கு ஏற்ப வேறு பாடங்கள் / வேறுபணிகளை ஒப்படைக்கலாம் .

➡️நூலகப் பாடசாலையாயின் நூலக நடவடிக்கைகளுக்காக ஒருவரை வழங்க வேண்டும் .

➡️உயர்தர வகுப்பிற்கு பிரதான பாடத்தைக் | கற்பிக்கும் ஆசிரியர் வாரத்தில் ஆகக்குறைந்தது 30 பாடவேளைகள் கற்பித்தலில் ஈடுபடவேண்டும் .

➡️ வகுப்பாசிரியர்கள் வாரத்தில் ஆகக்குறைந்தது 33 பாடவேளைகள் கற்பித்தலில் ஈடுபடவேண்டும் .

🔴மேற்பார்வை ஆசிரியர்கள் 1000 மாணவர்களுக்கு மேற்படின் ஒரு ஆசிரியரை நியமிக்க முடியும் . மேற்பார்வையாளர்கள் 16 பாடவேளைகளில் கற்பித்தலில் ஈடுபட்வேண்டும் . மேற்பார்வை ஆசிரியர்கள் வருடாந்த மேற்பார்வைத்திட்டத்தை தயாரித்து அதிபரிடம் அனுமதி பெறவேண்டும் .

⭐கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செயற்பாட்டு விடுப்புகளைத் தவிர்த்து குறைந்தபட்சம் 30 பாடவேளைகள் கற்பித்தலில் ஈடுபட வேண்டும் . எஞ்சிய பாடவேளைகளில் கற்பித்தலுடன் தொடர்புடைய செயற்பாடுகளிலும் அதிபரால் பணிக்கப்படும் பணிகளிலும் ஈடுபட வேண்டும் .

⭐பாடசாலை அபிவிருத்திச்சங்கப் பொருளாளராகப் பணிபுரியும் ஆசிரியரை அப்பணிக்காக 10 பாடவேளைகள் விடுவிக்க முடியும் .

⭐30 பாடவேளைகளுக்குக் குறைவான கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் விளையாட்டு , அழகியல் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான பொறுப்பை ஏற்று அதற்கான வருடாந்த திட்டத்தைத் தயாரித்து அதிபரிடம் அனுமதி பெற்று செயற்படுத்த வேண்டும் .

கருத்துரையிடுக

0 கருத்துகள்