2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலான காலம் தேவை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்களத்தின் ஏனைய பரீட்சை கடமைகளுக்கு மத்தியில் பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான நடவடிக்கைகள் காரணமாக பொதுப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு சிறிது காலம் எடுக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்