வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கான அறிவிப்பு !

கடவுச்சீட்டையும் பணத்தையும் ஏஜென்சிக்கு வழங்க முன்னர் சிந்தியுங்கள்!

 

வெளிநாட்டு வேலை ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்காக, கடவுச்சீட்டையும் பணத்தையும் ஏஜென்சிக்கு வழங்குவதற்கு முன் அதனை சார்பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

குறித்த ஏஜென்சி, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக என்பதை உறுதிப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தொலைபேசி இலக்கமான 1989 அல்லது www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

 

இவ்வாறு சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டபூர்வமானது என்பதை உறுதிப்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்